உள்ளூர் செய்திகள்
குடிமை பொருள் வழங்கல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பாப்ஸ்கோ ஊழியர்கள்.

பாப்ஸ்கோ ஊழியர்கள் போராட்டம்

Published On 2022-05-06 10:11 GMT   |   Update On 2022-05-06 10:11 GMT
தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
புதுச்சேரி:

ஏ.ஐ.டி.யூ.சி. பாப்ஸ்கோ ஊழியர் சங்கம் சார்பில் தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

பாப்ஸ்கோ சங்க தலைவர் ரமேஷ் , செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் அமுதவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயல் தலைவர் அபிஷேகம், ஏ.ஐ.டி.யூ.சி. தலைவர் தினேஷ் பொன்னையா, பொதுச்செயலாளர் சேதுசெல்வம், நிர்வாகிகள் துரைசெல்வம், ஜெய்சங்கர், பத்மநாபன், கமிட்டி உறுப்பினர்கள்  ஜீவரத்தினம், மார்க்கெழியன், அமுதா, ஆதி, அம்சவள்ளி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 பாப்ஸ்கோ தீபாவளி பஜார் மானியம் ரூ.62 லட்சத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும். பாப்ஸ்கோ மூலம் நடத்த ப்படும் 47 ரேஷன்கடை வாடகை தொகை ரூ.ஒரு கோடியே 30 லட்சத்தை குடிமைப்பொருள் வழங்கல்துறை உடனடியாக வழங்க வேண்டும். ரேஷன் அரிசி விநியோகத்துக்கு கிலோவுக்கு ரூ.1.20 வழங்க வேண்டும்.

பொங்கல் பொருட்கள் வழங்கிய கமிஷன் தொகையை பாப்ஸ்கோவுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இயக்குனர் அலுவலகத்தை போராட்டக்குழுவினர் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News