ஆன்மிகம்
குக்கே சுப்பிரமணியா கோவிலில் தேர் திருவிழா டிசம்பர் மாதம் நடக்கிறது
தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகாவில் உள்ள பிரசித்திபெற்ற குக்கே சுப்பிரமணியா கோவிலில் இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா நடத்தப்பட உள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகாவில் உள்ள பிரசித்திபெற்ற குக்கே சுப்பிரமணியா கோவிலில் இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று கோவில் அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பு மந்திரியும், அறநிலையத்துறை மந்திரியுமான கோட்டா சீனிவாசபூஜாரி தலைமையில் நடந்தது.
இதில் வருகிற டிசம்பர் மாதம் 12-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை திருவிழாவை வழக்கமான நடைமுறைகளின்படி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவிலில் அனைத்து பூஜைகளும் நடைபெறும் என்றும், பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்படும் என்றும் மந்திரி கோட்டா சீனிவாசபூஜாரி தெரிவித்தார்.
இதில் வருகிற டிசம்பர் மாதம் 12-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை திருவிழாவை வழக்கமான நடைமுறைகளின்படி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவிலில் அனைத்து பூஜைகளும் நடைபெறும் என்றும், பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்படும் என்றும் மந்திரி கோட்டா சீனிவாசபூஜாரி தெரிவித்தார்.