செய்திகள்
கைது

விருதுநகரில் சாப்பிட்டுவிட்டு ஓட்டலில் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

Published On 2021-08-29 10:16 GMT   |   Update On 2021-08-29 10:16 GMT
விருதுநகரில் சாப்பிட்டுவிட்டு ஓட்டலில் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்:

விருதுநகர் பழைய பஸ் நிலையம் பகுதியில் முகமது சம்சுதீன் (வயது 37) ஓட்டல் நடத்தி வருகிறார்.

நேற்று இவரது ஓட்டலுக்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சாப்பிட்டார். பின்னர் அவர் பணம் கொடுக்க மறுத்ததோடு, முகமது சம்சுதீனிடம் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது அந்த வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி பணம் தர முடியாது என மிரட்டினார்.

உடனே ஓட்டலில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதியினர் விரைந்து செயல்பட்டு அந்த வாலிபரை பிடித்து கத்தியை பறித்தனர். பின்னர் இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த வாலிபரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில், கத்தியை காட்டி மிரட்டியது நாகூரை சேர்ந்த அப்துல்பதாக் என தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News