செய்திகள்
கைது

மேலப்பாளையத்தில் 18 கிலோ புகையிலை பறிமுதல்- 2 பேர் கைது

Published On 2021-10-10 09:53 GMT   |   Update On 2021-10-10 09:53 GMT
மேலப்பாளையத்தில் 18 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

நெல்லை:

நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் பாதுஷா(வயது 52). அதே பகுதியை சேர்ந்தவர் காஜா நிஜாமுதின்(45). இவர்கள் 2 பேரும் தங்களுக்கு சொந்தமான கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் மேலப்பாளையம் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது 18 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News