செய்திகள்
டீம் இந்தியா

இந்திய கிரிக்கெட் அணியினருக்கான வெளிநாட்டு பயணத்தின் தினப்படி இரண்டு மடங்காக அதிகரிப்பு

Published On 2019-09-22 11:52 GMT   |   Update On 2019-09-22 11:52 GMT
வெளிநாட்டு பயணத்திற்கான இந்திய கிரிக்கெட் அணியினரின் தினப்படி இரண்டு மடங்காக உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டு மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. மேலும் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியை வென்றுள்ளது.

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் வென்று சாதனைப் படைத்தது. அடுத்த வருடம் தொடக்கத்தில் நியூசிலாந்து செல்கிறது. இந்நிலையில் வெளிநாட்டு பயணத்தின்போது வழங்கப்படும் தினப்படி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

முன்பு வெளிநாட்டு பயணத்தின்போது ஒருவருக்கு தினப்படியாக 125 டாலர் (இந்திய பணமதிப்பில் சுமார் ரூ.8,899.65) இருந்தது. தற்போது அது 250 டாலராக (இந்திய பணமதிப்பில் ரூ. 17,799.30) உயர்த்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News