உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

முககவசம் அணியாமல் வந்த 660 பேருக்கு அபராதம் விதிப்பு

Published On 2022-01-12 11:15 GMT   |   Update On 2022-01-12 11:15 GMT
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முககவசம் கட்டாயம் அணியவேண்டும் என அரசு அறிவித்துள்ளது. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறது.
ஈரோடு:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முககவசம் கட்டாயம் அணியவேண்டும் என அரசு அறிவித்துள்ளது. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறது. 

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதை அடுத்து  பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் மற்றொரு தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் எனவும் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஈரோடு மாவட்டத்தில் இரவுநேர ஊரடங்கின் போது  தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நேற்று மாநகர் பகுதியில் இரவு நேரத்தில் தேவையின்றி வெளியே சுற்றியதாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 5 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதேபோல் மாவட்டம் முழுவதும் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு போலீசார், வருவாய்த் துறையினர் தலா ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் முககவசம் அணியாமல் வந்த 660 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News