உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே பெட்டிக்கடையை காணவில்லை என மாற்றுத்திறனாளி புகார்
பெட்டிக்கடையில் ஆவின் பால் விற்பனை செய்வதற்கு அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டரிடம் ஜரீனா பேகம் மனு அளித்திருந்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சையது நிஷா (வயது75). இவரது மகள் ஜரீனா பேகம் (35). மாற்றுத்திறனாளி. இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை பள்ளிவாசல் முன்பு இருவரும் சேர்ந்து பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர்.
இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்தப் பெட்டிக்கடையில் ஆவின் பால் விற்பனை செய்வதற்கு அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டரிடம் ஜரீனா பேகம் மனு அளித்திருந்தார்.
இந்தநிலையில் இரவோடு இரவாக பெட்டிக்கடையை சிலர் அங்கிருந்து அகற்றி விட்டதாக கூறி சையது நிஷா பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.