செய்திகள்
அக்டோபர் 15 முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி - மத்திய அரசு அறிவிப்பு - வீடியோ தொகுப்பு
அக்டோபர் 15-ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி:
கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் 31 வரை நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் 5-வது கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதில் அக்டோபர் 15-ம் தேதி முதல் தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் திறக்கவும் அனுமதி அளித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் திறப்பு குறித்து அக்டோபர் 15-ம் தேதிக்குப் பின்னர் மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது..