செய்திகள்
பொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்டு 12 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் - அண்ணா பல்கலை
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்டு 12-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்டு 12-ம் தேதி தொடங்கப்படுகிறது.
முதலாண்டு மாணவர்களைத் தவிர்த்து இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 26-ம் தேதி வரை ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும்.
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்.
பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.