செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

கலவை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

Published On 2020-09-16 11:57 GMT   |   Update On 2020-09-16 11:57 GMT
கலவை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலவை:

கலவை அருகே உள்ள மேலபந்தை கிராமத்தை சேர்ந்தவர் கந்தன் (வயது 52). இவர் தனது மகள் திருமணத்திற்காக குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் சென்றார். வீட்டின் சாவியை பக்கத்து வீட்டை சேர்ந்த உறவினர் ருத்ராவிடம் கொடுத்து சென்றார்.

இந்த நிலையில் நேற்று கந்தனின் வீட்டு கதவு திறந்திருந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த ருத்ரா உடனடியாக கந்தனுக்கு போனில் தகவல் தெரிவித்தார். வீட்டிற்கு வந்த கந்தன் அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து, அதிலிருந்த 2¾ பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் வாழைப்பந்தல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News