செய்திகள்
சவுரவ் கங்குலி

சவுரவ் கங்குலி புதன்கிழமை டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பு

Published On 2021-01-04 11:44 GMT   |   Update On 2021-01-04 11:44 GMT
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலி நாளைமறுதினம் டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்புள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரான சவுரவ் கங்குலிக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 48 வயதான அவருக்கு இரண்டு அடைப்புகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையின் மூலம் ஒரு அடைப்பு சரிசெய்யப்பட்டது. 2-வது அடைப்பும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலம் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2-வது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், நாளைமறுதினம் (புதன்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News