செய்திகள்
மகாராஷ்டிராவில் மேலும் 19,164 பேருக்கு கொரோனா
மகாராஷ்டிராவில் இன்று மேலும் 19,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அங்கு கொரோனாவால் 459 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 19,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 459 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மகாராஷ்டிராவில் மேலும் 19,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12.82 லட்சத்தைக் கடந்துள்ளது.
இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 459 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 345 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து 9,73,214 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 2,74,933 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.