செய்திகள்
ஈரோட்டில் அரசு பள்ளி மாணவர்கள் மேலும் 2 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது.
கோபி:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பட்டிமணியகாரன் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளியில் படிக்கும் 253 மாணவர்கள், 26 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர் வசித்த பகுதியிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதே போல் கடத்தூர் பள்ளிக்கூட பிரிவு என்ற பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து பள்ளியில் 210 மாணவர்கள், 30 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதுவரை ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பட்டிமணியகாரன் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளியில் படிக்கும் 253 மாணவர்கள், 26 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர் வசித்த பகுதியிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதே போல் கடத்தூர் பள்ளிக்கூட பிரிவு என்ற பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து பள்ளியில் 210 மாணவர்கள், 30 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதுவரை ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது.