உள்ளூர் செய்திகள்
மரணம்

வானூர் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

Published On 2022-05-04 10:58 GMT   |   Update On 2022-05-04 10:58 GMT
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திடீரென வலிப்பு வந்ததால் குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். (வயது 55). இவருக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள குளம் ஒன்றிற்கு சரவணன் துணி துவைக்க சென்றார்.

துணி துவைத்துக்கொண்டு இருந்தபோதே அவருக்கு திடீரென வலிப்பு வந்துள்ளது. அக்கம்பக்கம் உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் சரவணன் குளத்துக்குள் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவ்வழியாக மாடு மேய்க்க சென்ற ஒருவர் சரவணன் குளத்தில் பிணமாக மிதப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் தந்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் விரைந்துவந்து சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News