செய்திகள்
கைது

வாணியம்பாடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

Published On 2021-11-30 09:02 GMT   |   Update On 2021-11-30 09:02 GMT
வாணியம்பாடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 48). பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் மணிகண்டன் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துகொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கோணாமேடு பகுதியை சேர்ந்த ராகுல் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News