செய்திகள்
கொரோனா பரிசோதனை

கர்நாடகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 11,265 பேருக்கு கொரோனா

Published On 2021-04-15 02:57 GMT   |   Update On 2021-04-15 02:57 GMT
கர்நாடகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 11,265 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பெங்களூருவில் ஒருநாள் பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டி உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு :

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 13 ஆயிரத்து 242 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 11 ஆயிரத்தை 265 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 94 ஆயிரத்து 912 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 38 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 46 ஆக உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் 4,364 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 96 ஆயிரத்து 367 ஆக அதிகரித்துள்ளது. 506 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 480 ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரேநாளில் 8,155 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகல்கோட்டையில் 68 பேர், பல்லாரியில் 159 பேர், பெலகாவியில் 107 பேர், பெங்களூரு புறநகரில் 48 பேர், பீதரில் 290 பேர், சாம்ராஜ்நகரில் 72 பேர், சிக்பள்ளாப்பூரில் 44 பேர், சிக்கமகளூருவில் 42 பேர், சித்ரதுர்காவில் 17 பேர், தட்சிண கன்னடாவில் 140 பேர், தாவணகெரேயில் 34 பேர், தார்வாரில் 127 பேர், கதக்கில் 25 பேர், ஹாசனில் 132 பேர், ஹாவேரியில் 44 பேர், கலபுரகியில் 376 பேர், குடகில் 23 பேர், கோலாரில் 116 பேர், கொப்பலில் 37 பேர், மண்டியாவில் 85 பேர், மைசூருவில் 356 பேர், ராய்ச்சூரில் 65 பேர், ராமநகரில் 35 பேர், சிவமொக்காவில் 92 பேர், துமகூருவில் 245 பேர், உடுப்பியில் 110 பேர், உத்தரகன்னடாவில் 41 பேர், விஜயாப்புராவில் 122 பேர், யாதகிரியில் 58 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 23 பேர், மைசூருவில் 5 பேர், தார்வார், கலபுரகியில் தலா 3 பேர், பீதரில் 2 பேர், பல்லாரி, துமகூருவில் தலா ஒருவர் என மொத்தம் 38 பேர் உயிழந்தனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் புதிய உச்சமாக ஒரேநாளில் 11 ஆயிரத்து 265 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் மட்டும் நேற்று ஒரேநாளில் 8 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், நகர மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News