செய்திகள்
கோப்புபடம்

தூத்துக்குடி அருகே மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

Published On 2021-02-22 15:17 GMT   |   Update On 2021-02-22 15:17 GMT
தூத்துக்குடி அருகே மூதாட்டியிடம் 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி தங்கம் (வயது 65). இவர் நேற்று முன்தினம், அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தாராம். அப்போது அந்த பகுதியில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க 2 மர்ம நபர்கள் நடந்து வந்தனர். அவர்கள் திடீரென தங்கம் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கசங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News