செய்திகள்
பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா அதிகரிப்பு எதிரொலி: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Published On 2021-04-08 13:38 GMT   |   Update On 2021-04-08 13:38 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துவார் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி பிரதமர் மோடி தற்போது அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழ்நாடு, மேற்கு வங்காளம் முதல்வர்கள் சார்பில் தலைமை செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News