செய்திகள்
திருவள்ளூர் அருகே விபத்து- முதியவர் பலி
திருவள்ளூர் அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கூடப்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அந்த வழியாக சாலையை கடக்க முயன்றார். அப்போது திருவள்ளூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி வேகமாக வந்த வாகனம் ஒன்று மோதியதில், முதியவர் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இச்சம்பவம் குறித்து கூடப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் செல்வமுத்து வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த முதியவர் யார்? மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற வாகன ஓட்டி யார்? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கூடப்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அந்த வழியாக சாலையை கடக்க முயன்றார். அப்போது திருவள்ளூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி வேகமாக வந்த வாகனம் ஒன்று மோதியதில், முதியவர் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இச்சம்பவம் குறித்து கூடப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் செல்வமுத்து வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த முதியவர் யார்? மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற வாகன ஓட்டி யார்? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.