ஆன்மிகம்
திருச்செந்தூர் கோவில்

திருச்செந்தூர் கோவிலில் நடை திறப்பு- பூஜை காலங்கள் மாற்றம் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு

Published On 2020-12-16 05:52 GMT   |   Update On 2020-12-16 05:52 GMT
மார்கழி மாதம் தொடக்கத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று முதல் நடை திறப்பு- பூஜை காலங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர்(பொறுப்பு) கல்யாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ் மாதமான மார்கழி இன்று (புதன்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் ஜனவரி 13-ந் தேதி நிறைவு பெறுகிறது.

மார்கழி மாதம் தொடக்கத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று முதல் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனைக்கு பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும்.

டிசம்பர் 30-ந் தேதி (புதன்கிழமை) அன்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 2 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 2.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும்.

ஜனவரி 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆங்கில வருடப்பிறப்பு மற்றும் ஜனவரி 14-ந் தேதி (வியாழக்கிழமை) தை பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கும் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News