செய்திகள்
விஜயகாந்த்

தேமுதிகவை விட்டுச் செல்வது கட்சிக்கு செய்யும் துரோகம்- விஜயகாந்த் ஆவேசம்

Published On 2021-10-25 07:24 GMT   |   Update On 2021-10-25 07:24 GMT
100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
சென்னை:

தேமுதிகவின் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மூளைச்சலவை செய்வோரின் பேச்சு, ஆசை வார்த்தைகளை நம்பி தேமுதிகவை விட்டுச்செல்வது கட்சிக்கு செய்யும் துரோகம். கட்சியை விட்டு மாற்று கட்சிக்குச் செல்பவர்கள் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை உணரும் நாள் வரும்.



எனது உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான். தேமுதிகவிற்கு எதிர்காலமே இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம். 100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது.

தமிழகத்தில்
தேமுதிக
வேரூன்றி இருக்கும். கழகத்தின் மீது அவதூறு பரப்புபவர்களின் வார்த்தைகளை தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம். நமது கழகம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லவும் தொண்டர்களின் உறுதுணை வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags:    

Similar News