உள்ளூர் செய்திகள்
.

எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

Published On 2022-05-06 08:03 GMT   |   Update On 2022-05-06 08:03 GMT
நாமக்கல்லில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் 10-ந்தேதி நடக்கிறது.
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோா்கள் நலன் கருதி, அனைத்து எண்ணை எரிவாயு நிறுவன முகவா்கள், எரிவாயு விநியோகஸ்தா்கள், எரிவாயு நுகா்வோா்கள், தன்னாா்வலா்கள் ஆகியோா் பங்கேற்கும் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வருகிற 10-ந் தேதி காலை 11 மணிக்கு, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் கதிரேசன் தலைமையில் நடைபெற உள்ளது.

எரிவாயு விநியோகம் தொடா்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகா்வோா்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு விநியோகம் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவித்து மனுக்கள் அளிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News