உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- மகனுடன் தம்பதி காயம்
கடலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் காயமடைந்தது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் பாதிரிக்குப்பம் சேர்ந்தவர் கபிலன் (வயது 37). அவரது மனைவி மங்காத்தா (28) இவர்களது மகன் சர்வேஷ் (4). இவர்கள் 3 பேரும் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் காராமணிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் திடீரென்று மோதியதில் கணவன் கபிலன், மனைவி மங்காத்தா மற்றும் சிறுவன் சர்வேஷ் ஆகிய 3 பேரும் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் பாதிரிக்குப்பம் சேர்ந்தவர் கபிலன் (வயது 37). அவரது மனைவி மங்காத்தா (28) இவர்களது மகன் சர்வேஷ் (4). இவர்கள் 3 பேரும் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் காராமணிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் திடீரென்று மோதியதில் கணவன் கபிலன், மனைவி மங்காத்தா மற்றும் சிறுவன் சர்வேஷ் ஆகிய 3 பேரும் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.