செய்திகள்
விபத்து

சித்தோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி படுகாயம்

Published On 2021-10-12 11:02 GMT   |   Update On 2021-10-12 11:02 GMT
சித்தோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி படுகாயமடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தோடு:

பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையம், மூலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை (35) பந்தல் போடும் கூலி தொழிலாளி. இவர் மூலப்பாளையம் விநாயகர் கோவில் அருகே வேலை முடித்து விட்டு வீட்டிற்கு செல்ல காலிங்கராயன் பாளையம்- பெருந்தலையூர் ரோட்டை கடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று தங்கதுரை மீது மோதி விட்டு நிறுத்தாமல் சென்று விட்டது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடிப்பட்டு துடித்தார்.

பலத்த காயம் அடைந்த தங்க துரையை அக்கம் பக்கத்தினர் மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு இருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News