செய்திகள்
தற்கொலை

வடவள்ளி அருகே ஆசிரியர் பயிற்சி முடித்த இளம்பெண் தற்கொலை

Published On 2019-09-16 09:34 GMT   |   Update On 2019-09-16 09:34 GMT
கோவை வடவள்ளி அருகே ஆசிரியர் பயிற்சி முடித்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

கோவை வடவள்ளி அருகே உள்ள பாரதியார் நகரை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மகள் சுவாதிகா (வயது 20). இவர் ஆசிரியர் பயிற்சி படித்து முடித்து இருந்தார்.

சுவாதிகா கடந்த 4 வருடங்களாக வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். அந்த வாலிபரை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தனது பெற்றோரிடம் அவர் கூறி வந்தார். ஆனால் அவரது பெற்றோர் வாலிபரை திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டனர்.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக சுவாதிகா மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தனது அறையில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த தகவல் கிடைத்ததும் வடவள்ளி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட சுவாதிகாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News