செய்திகள்
நாமக்கல் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறிய 447 பேர் மீது வழக்கு
நாமக்கல் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறிய 447 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நாமக்கல்:
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் நடமாடுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் நடமாடிய 429 பேர் மீதும், பொது இடங்களில் எச்சில் துப்பியதாக 18 பேர் மீதும் என 447 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.94,800 அபராதமாக வசூலிக்கப்பட்டது.