செய்திகள்
தி.மு.க.

மத்திய மாநில அரசை கண்டித்து கடலூரில் தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2019-11-21 16:22 GMT   |   Update On 2019-11-21 16:22 GMT
கர்நாடக அரசு தென் பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டுவதை தடுக்காத மத்திய- மாநில அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்:

கர்நாடக அரசு தென் பெண்ணை ஆற்றில் தடுப் பணை கட்டுவதை தடுக்காத மத்திய-மாநில அரசை கண்டித்து கடலூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதற்கு முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ. க்கள்சரவணன், சபா. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது மத்திய மாநில அரசை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். 
Tags:    

Similar News