ஆட்டோமொபைல்
புதிய ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரம்
ஹோண்டா நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹோண்டா நிறுவனம் புதிய மோட்டார்சைக்கிளை பிப்ரவரி 16 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கென அந்நிறுவனம் டீசரை வெளியிட்டு இருக்கிறது. டீசரின் படி புதிய மோட்டார்சைக்கிள் ஸ்கிராம்ப்ளர் ரக மாடலாக இருக்கும் என தெரிகிறது.
புதிய மோட்டார்சைக்கிளில் சிபி300ஆர் மாடலில் உள்ளதை போன்ற டெயில் லேம்ப், க்ரோம் சஸ்பென்ஷன் செட்டப் வழங்கப்படுகிறது. இவைதவிர புதிய மோட்டார்சைக்கிளில் பிளாக்டு-அவுட் உபகரணங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஹோண்டா மோட்டார்சைக்கிளில் 348சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிபி350 மாடலில் வழங்கியதை போன்ற செயல்திறன் புதிய மாடலிலும் வழங்கும் என கூறப்படுகிறது.
இத்துடன் புதிய மாடலில் ஹோண்டா செலக்டபில் டார்க் கண்ட்ரோல், ப்ளூடூத் சார்ந்த இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்இடி லைட்டிங் வழங்கப்படலாம் என தெரிகிறது.