ஆன்மிகம்
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் சிறிய சேஷ, ஹம்ச வாகன சேவை
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் சிறிய சேஷ வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை சிறிய சேஷ வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
விழாவில் கோவில் துணை அதிகாரி பார்வதி, தேவஸ்தான முதன்மை என்ஜினீயர் ரமேஷ்ரெட்டி, உதவி அதிகாரி துர்க்காராஜு, சூப்பிரண்டு ரமேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டும், சமூக விலகலை கடைப்பிடித்தும் நடந்தது. அதைதொடர்ந்து இரவு ஹம்ச வாகனத்தில் உற்சவர் கோதண்டராமர் எழுந்தருளி அருள்பாலித்தார்.
விழாவில் கோவில் துணை அதிகாரி பார்வதி, தேவஸ்தான முதன்மை என்ஜினீயர் ரமேஷ்ரெட்டி, உதவி அதிகாரி துர்க்காராஜு, சூப்பிரண்டு ரமேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டும், சமூக விலகலை கடைப்பிடித்தும் நடந்தது. அதைதொடர்ந்து இரவு ஹம்ச வாகனத்தில் உற்சவர் கோதண்டராமர் எழுந்தருளி அருள்பாலித்தார்.