செய்திகள்
கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை- பெயிண்டர் கைது

Published On 2020-09-18 10:03 GMT   |   Update On 2020-09-18 10:03 GMT
காஞ்சிபுரத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி ரோட்டில் வசிப்பவர் அரிகிருஷ்ணன் (வயது 31). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் காஞ்சிபுரம் தும்பவனம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் தந்தை காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மைனர்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அரிகிருஷ்ணனை கைது செய்தனர்.
Tags:    

Similar News