செய்திகள்
கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் மேலும் 1,164 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-10-21 16:29 GMT   |   Update On 2021-10-21 16:29 GMT
அரசு மருத்துவமனைகளில் 15 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் என இன்று 20 பேர் உயிரிழந்தனர்.
சென்னை:

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று 1,29,820 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 1,164 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,170-ல் இருந்து 1,164 ஆக குறைந்துள்ளது.  மொத்த பாதிப்பு 26,91,797 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் மேலும் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கோவையில் 137 பேருக்கும், செங்கல்பட்டில் 98 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து மேலும் 1,412 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், இதுவரை 26,42,039 பேர் குணமடைந்து  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 13,790 ஆக உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 15 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் என இன்று 20 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,968 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News