செய்திகள்
விபத்து பலி

வேளாங்கண்ணி அருகே லாரி மோதி தொழிலாளி பலி

Published On 2021-06-23 12:38 GMT   |   Update On 2021-06-23 13:00 GMT
வேளாங்கண்ணி அருகே லாரி மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் காரைநகர் பெரியாச்சி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மகன் காமராஜ் (வயது30). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது உறவினர் குணசேகரனுடன் மோட்டார் சைக்கிளில் நாகையில் இருந்து காரை நகரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது வேளாங்கண்ணி ஆர்ச் அருகே சென்ற போது அருந்தவம்புலத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

விபத்தில் குணசேகரன், காமராஜ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி காமராஜ் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த குணசேகரன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News