இந்தியா
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்

உலகின் தலைச்சிறந்த நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் - ராஜ்நாத்சிங் பெருமிதம்

Published On 2021-12-18 08:25 GMT   |   Update On 2021-12-18 08:25 GMT
இந்திய பொருளாதாரம் பெரும் வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் 94-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துக்கொண்டார். அங்கு பேசிய அவர் இவ்வாறு கூறினார்:-

இந்திய பொருளாதாரம் பெரும் வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. நம் நாட்டில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக துறைகளில் பல திறன் வாய்ந்த இளைஞர்கள் இருக்கின்றனர். உலகின் தலைச் சிறந்த நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாகவும் இந்தியர்கள்தான் இருக்கின்றனர். நம் நாட்டை உலகின் ஆரோக்கியமான மற்றும் தலைச் சிறந்த தொழில் சக்தியாக உருவாக்க இந்திய அரசு, கல்வி மற்றும் மருத்துவ துறைகளில் தனியார் மற்றும் பொது நிறுவனங்களின் முதலீட்டை ஊக்குவித்து வருகிறது. நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மருத்துவ கல்லூரி மற்றும் மாநிலத்திற்கு ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதே நமது லட்சியம் என கூறினார்.

ஒடிசா பாலசோர் கடற்கரையில் பகுதியில்  இன்று நடைபெற்ற அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததை தொடர்ந்து இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு தன் வாழ்த்துகளையும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News