தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி எப்42 5ஜி

சாம்சங் கேலக்ஸி எப்42 5ஜி வெளியீட்டு விவரம்

Published On 2021-09-23 10:52 GMT   |   Update On 2021-09-23 10:52 GMT
சாம்சங் நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.


சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 29 ஆம் தேதி அறிமுகமாகிறது.

வெளியீட்டு தேதியுடன் ஸ்மார்ட்போனின் சில அம்சங்களும் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச், மூன்று கேமரா சென்சார்கள், சதுரங்க வடிவம் கொண்ட கேமரா மாட்யூல் கொண்டிருக்கிறது.



இத்துடன் புல் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 12 5ஜி பேண்ட்களுக்கான சப்போர்ட், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News