செய்திகள்
கோயம்பேட்டில் ஆட்டோ மோதி மாணவன் பலி- டிரைவர் கைது
சென்னை கோயம்பேட்டில் ஆட்டோ மோதிய விபத்தில் மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து டிரைவர் கைது செய்யப்பட்டார்.
போரூர்:
கோயம்பேடு சேமாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் சஞ்சய்குமார் (வயது14). நெற்குன்றத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 16-ந்தேதி மாலை பள்ளி முடிந்து சஞ்சய்குமார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
காளியம்மன் கோவில் தெருவில் வந்தபோது அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோ திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில் சஞ்சய்குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சஞ்சய்குமார் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாங்காடு, பரணிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அறிவழகனை கைது செய்தனர்.
கோயம்பேடு சேமாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் சஞ்சய்குமார் (வயது14). நெற்குன்றத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 16-ந்தேதி மாலை பள்ளி முடிந்து சஞ்சய்குமார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
காளியம்மன் கோவில் தெருவில் வந்தபோது அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோ திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில் சஞ்சய்குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சஞ்சய்குமார் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாங்காடு, பரணிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அறிவழகனை கைது செய்தனர்.