ஆன்மிகம்
கருப்பண்ணசாமி

குட்ட கருப்பண்ணசாமி கோவில் திருவிழா

Published On 2021-03-02 03:56 GMT   |   Update On 2021-03-02 03:56 GMT
நொய்யல் அருகே மரவாபாளையம் பகுதியில் அமைந்துள்ள குட்ட கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நொய்யல் அருகே மரவாபாளையம் பகுதியில் அமைந்துள்ள குட்ட கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீரை எடுத்து கொண்டு கோவிலுக்கு வந்தனர்.

தொடர்ந்து சுவாமிக்கு பால், தயிர், பன்னீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் மாலையில் பெண்கள் பொங்கல் மற்றும் மாவிளக்கு வைத்து சுவாமியை வழிபட்டனர். இரவு வாணவேடிக்கை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News