செய்திகள்
கைது

கமுதியில் உணவில் வெடிவைத்து நாய்களை கொன்ற 2 பேர் கைது

Published On 2020-09-17 09:01 GMT   |   Update On 2020-09-17 09:01 GMT
கமுதியில் உணவில் வெடிவைத்து நாய்களை கொன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
கமுதி:

கமுதி கோட்டைமேட்டில் நரிக்குறவர் காலனி அருகே வீட்டு வளர்ப்பு நாய்களுக்கு மர்ம நபர்கள் உணவில் வெடி வைத்து கொடுத்துள்ளனர். இதனை சாப்பிட்ட நாய் வெடி வெடித்ததில் வாய் சிதறி பரிதாபமாக இறந்தது.

இதுவரை அப்பகுதியில் 3 நாய்களுக்கு மேல் வெடி வைத்து கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நாய்களின் உரிமையாளர்கள் அப்பகுதியில் உள்ள நரிக்குறவர்களிடம் கேட்டபோது வீட்டில் வைத்திருந்த வெடிகளை சாப்பிட்டு இறந்திருக்கலாம் என அலட்சியமாக தெரிவித்துள்ளனர்.

நரிக்குறவர்களின் வீடுகளில் சட்டவிரோதமாக வெடிபொருட்களை வைத்திருப்பது தொடர்பாகவும், நாய்களை வெடி வைத்து கொன்று வரும் மர்ம நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமுதி போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகநாதன், முருகன் விசாரணை நடத்தி, நாய்களுக்கு உணவில் வெடி வைத்து கொன்றது தொடர்பாக நரிக்குறவர் புது குடியிருப்பை சேர்ந்த சிவராஜன் (வயது 41), குமரேசன் (28) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News