செய்திகள்
அபராதம்

ஆற்காடு அருகே ஊரடங்கை மீறி செயல்பட்ட கம்பெனிக்கு ரூ.16 ஆயிரம் அபராதம்

Published On 2021-05-18 10:13 GMT   |   Update On 2021-05-18 10:13 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று ஆற்காடு அடுத்த குக்குண்டி பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பலர் வேலை செய்து வந்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த கம்பெனிகள் செயல்பட அரசு தடை விதித்துள்ளது. இதனை பின்பற்றாமல் தொழிலாளர்கள் வேலைசெய்து கொண்டிருந்ததை பார்த்த ஆற்காடு தாசில்தார் காமாட்சி ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட கம்பெனிக்கு ரூ. 16 ஆயிரத்து 400 அபராதம் விதித்தார்.
Tags:    

Similar News