செய்திகள்
கொரோனா தொற்று பரிசோதனை

மதுரையில் கொரோனாவால் 61 பேர் பாதிப்பு

Published On 2020-10-21 02:15 GMT   |   Update On 2020-10-21 02:15 GMT
மதுரையில் நேற்று புதிதாக 61 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மதுரை:

மதுரையில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 100-க்கும் கீழாகவே உள்ளது. மதுரையில் நேற்று புதிதாக 61 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 47 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 145 ஆக உயர்ந்தது. மேலும் நேற்று 70 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 986 ஆக உயர்ந்துள்ளது. இவர்களை தவிர 750 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று கொரோனாவால் 80 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
Tags:    

Similar News