செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் தேதியை இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்

Published On 2019-03-10 05:39 GMT   |   Update On 2019-03-10 05:39 GMT
2019 பாராளுமன்ற தேர்தல் தேதியை இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம். தமிழகத்தின் 21 தொகுதிகளுக்கான தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Election2019
இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது. அப்போது 2019 பாராளுமன்ற தேர்தல் தேதியை அறிவிக்கிறது. அத்துடன் ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட இருக்கிறது.

தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது. அதற்கான தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் 7 அல்லது 8 கட்டங்களாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News