செய்திகள்
விருதுநகர் கலெக்டர்

விவசாயிகளுக்கு தமிழக அரசின் சாதனையாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கண்ணன் தகவல்

Published On 2021-01-10 12:41 GMT   |   Update On 2021-01-10 12:41 GMT
தோட்டப்பயிர் சாகுபடி விவசாயிகள் தமிழகஅரசின் வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான தலா 10 சாதனையாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்:

தமிழக அரசு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் தோட்டப்பயிர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.காய்கறிகள், பழங்கள் போன்ற தோட்டப்பயிர் சாகுபடியில் அதிகம் லாபம் கிடைப்பதால் விவசாயிகள் ஈடுபாடு தற்சமயம ்அதிகரித்து வருகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தோட்டக்கலை பயிர்களை சிறந்த முறையில் தொழில் உத்திகளைக் கையாண்டு சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு தமிழக அரசு வட்டாரம், மாவட்ட, மாநில அளவில் தலா 10 சாதனையாளர்களுக்கு விருது வழங்க திட்டமிட்டுள்ளது.

காய்கறிகள், பழங்கள் சாகுபடி, பயிர்கள் சாகுபடி, மூலிகை வாசனை திரவிய பயிர்கள் சாகுபடி தொழில்நுட்ப மற்றும் பாதுகாக்கப்பட்ட சாகுபடி அங்கக மற்றும் இயற்கை விவசாய சாகுபடி புதிய தனித்துவமிக்க மாவட்டத்திற்கே சிறப்புக்குரிய தோட்டக்கலை பயிர்சாகுபடிக்கான சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

வட்டார அளவில் விருது பெற்றவர்களில் இருந்து மாவட்ட விருதுக்கும், மாவட்ட அளவில் விருது பெற்ற விவசாயிகள், மாநில விருதுக்கும் தேர்வு செய்யப்படுவர்.

வட்டார அளவில் விவசாயிகளை நியமிக்கப்பட்ட தேர்வுக்குழு தேர்வு செய்யும். இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள் இத்துறையின் இணைய தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அதனுடன் ரூ.100 விண்ணப்பக்கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

உரிய ஆவணங்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விருதுநகர் மாவட்ட தோட்டக்கலை விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் தொழில்நுட்ப சாதனைகளை வெளிக்கொணர்ந்து பயனடையுமாறு வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News