செய்திகள்
விபத்து

ஆரணி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் மரணம்

Published On 2021-03-04 11:20 GMT   |   Update On 2021-03-04 11:20 GMT
ஆரணி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:

ஆரணியை அடுத்த சிறுமூர் கிராமத்தை சேர்ந்த குமரவேல் என்பவரது மகன் பாலாஜி (வயது 22). இவரும், அவரது உறவினரான வேலூரை சேர்ந்த வினோத் (19) என்பவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அரியப்பாடி ஈச்ச ஓடை அருகே செல்லும் போது மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். இதில் இருவரும் காயம் அடைந்தனர். இதனையடுத்து 2 பேரும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், பாலாஜி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News