செய்திகள்
தற்கொலை

கோவையில் வாலிபர்கள் 2 பேர் தற்கொலை

Published On 2021-03-30 09:24 GMT   |   Update On 2021-03-30 09:24 GMT
கோவை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 2 வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

பொள்ளாச்சி தொண்டாமுத்தூர் சர்ச் வீதியைச் சேர்ந்தவர் கோகுல்நாத் (வயது 17). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவரது பெற்றோர் அவரை கண்டித்து வந்தனர்.

சம்பவத்தன்று மீண்டும் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தியடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மயிலாடுதுறையை சேர்ந்தவர் நவநீதன் (23). அவர் கருமத்தம்பட்டி பகுதியில் தங்கி அங்குள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்துவந்தார். இந்தநிலையில் நவநீதன் சம்பள பணத்தை பெற்றோருக்கு தராமல் இருந்து வந்தார். அதனை அவரது தந்தை கேட்டு சம்பள பணத்தை தருமாறு கூறினார். இதனால் மனவேதனை அடைந்த நவநீதன் விரக்தியடைந்து அறையில் கொசு மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அறையில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News