செய்திகள்
கைது

சேலத்தில் கல்லூரி மாணவரை தாக்கிய 4 பேர் கைது

Published On 2020-11-23 13:45 GMT   |   Update On 2020-11-23 13:45 GMT
சேலத்தில் கல்லூரி மாணவரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:

சேலத்தில் கல்லூரி மாணவரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சைலேஸ்வரன் (வயது 22).

இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். தற்போது கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மாணவர்கள் சேலம் அரசு கலைக்கல்லூரியில் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.

நேற்று முன்தினம் சைலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கு கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது வாலிபர்கள் சிலர் அவர்களிடம், இந்த இடத்தில் நாங்கள் தான் கிரிக்கெட் விளையாடுவோம். எனவே நீங்கள் வேறு இடத்திற்கு செல்லுங்கள், என்று கூறி உள்ளனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் சைலேஸ்வரனை கிரிக்கெட் மட்டையால் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வழக்குப்பதிவு செய்து மாணவரை தாக்கிய சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த அணீஸ் (22) , சையத் அமீர் (22) , முகமதுசையத் (23) , அமீர் பாஷா (23) ஆகிய 4 வாலிபர்களை கைது செய்தனர்.
Tags:    

Similar News