செய்திகள்
மரணம்

வாணியம்பாடி அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

Published On 2021-01-06 09:38 GMT   |   Update On 2021-01-06 09:38 GMT
வாணியம்பாடி அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:

வாணியம்பாடி - கேத்தாண்டப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே புதூர் ரெயில்வே கேட் அருகே 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற ஒரு ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News