செய்திகள்
அர்ஜுன மூர்த்தி

அர்ஜுன மூர்த்தி கட்சிக்கு ரோபோ சின்னம் ஒதுக்கீடு

Published On 2021-03-02 10:58 GMT   |   Update On 2021-03-02 10:58 GMT
அர்ஜுன மூர்த்தி கட்சிக்கு 234 தொகுதிகளிலும் போட்டியிட ரோபோ சின்னத்தை தலைமை தேர்தல் கமி‌ஷன் ஒதுக்கீடு செய்துள்ளது.

சென்னை:

நடிகர் ரஜினிக்கு நெருக்கமானவர் அர்ஜுன மூர்த்தி. ரஜினி கட்சி தொடங்குவதாக இருந்த நிலையில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி இருந்தார்.

இந்தநிலையில் ரஜினி அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்தார். இதையடுத்து அர்ஜுன மூர்த்தி இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.

வருகிற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் அறிவித்தார். அர்ஜுன மூர்த்தி கட்சி தொடங்கியதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தநிலையில் அர்ஜுன மூர்த்தி கட்சிக்கு 234 தொகுதிகளிலும் போட்டியிட ரோபோ சின்னத்தை தலைமை தேர்தல் கமி‌ஷன் ஒதுக்கீடு செய்துள்ளது.

ரஜினி நடித்த எந்திரன், 2.0 ஆகிய திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரமான ‘ரோபோ’ தனது கட்சிக்கு சின்னமாக கிடைத்து இருப்பதால் அர்ஜுன மூர்த்தி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Tags:    

Similar News