செய்திகள்
ஆர்ப்பாட்டம்

மின் வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-20 09:41 GMT   |   Update On 2020-11-20 09:41 GMT
மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, சங்கத்தின் மாவட்ட செயலாளர் துரை.நாராயணன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட பொருளாளர் இளமாறன், நகரத் தலைவர் விக்கி, செயலாளர் பாபு, பொருளாளர் ஏ.டேவிட் உள்ளிட்டோர் பேசினர். தமிழ்நாடு மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News