செய்திகள்

அண்ணாநகரில் வீட்டில் இருந்த 44 பவுன் நகை மாயம் - வேலைக்கார பெண்ணிடம் விசாரணை

Published On 2018-11-08 09:58 GMT   |   Update On 2018-11-08 09:58 GMT
அண்ணாநகரில் வீட்டில் இருந்த 44 பவுன் நகை மாயமானதையடுத்து வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #JewelRobbery
போரூர்:

அண்ணா நகர் மேற்கு அன்பு காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் வசந்தி. இவர் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். மகளின் திருமணத்துக்காக வசந்தி சில மாதங்களுக்கு முன்பு நிலத்தை விற்று நகைகள் வாங்கி வீட்டின் பீரோவில் வைத்திருந்தார். இந்த நிலையில் தீபாவளியன்று வசந்தி பீரோவை திறந்து பார்த்தபோது 44 பவுன் நகை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து திருமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் வசந்தியின் வீட்டில் பணியாற்றி வந்த வேலைக்கார பெண் ஜீவாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #JewelRobbery

Tags:    

Similar News