செய்திகள்
விஷம்

காதலி பேசாததால் இலங்கை வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2021-11-23 10:56 GMT   |   Update On 2021-11-23 10:56 GMT
பொள்ளாச்சி அருகே காதலி பேசாததால் மனவேதனை அடைந்த இலங்கையை சேர்ந்த வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் இலங்கைகள் முகாமை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 23) கூலித்தொழிலாளி. இவரும் அதே முகாமை சேர்ந்த 17 வயது பெண்ணும் காதலித்து வந்தனர்.

இவர்கள் காதல் விவகாரம் அவர்களது குடும்பத்திற்கு தெரியவந்தது. இருவரது குடும்பத்தாரும் அவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து ஒரு வருடம் கழித்து பெண்ணுக்கு 18 வயது ஆனவுடன் திருமணம் செய்து வைப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அஜித் குமார் காதலித்து வந்த 17 வயது பெண் குடும்பத்துடன் வீட்டை காலி செய்து ராமேஸ்வரத்தில் உள்ள இலங்கைகள் முகாமுக்கு சென்றனர். அப்போது அஜித்குமாருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அந்த பெண் அஜித்குமாரிடம் சரிவரப் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அஜித்குமார் கடந்த சில நாட்களாக மன வேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News