உள்ளூர் செய்திகள்
பயிர் சாகுபடி

பயிர் சாகுபடி விவரத்தை வேளாண்துறை தெரிவிக்க வேண்டுகோள்

Published On 2021-12-07 07:25 GMT   |   Update On 2021-12-07 07:25 GMT
பி.ஏ.பி. வாய்க்காலில் முதல் மண்டலப் பாசனத்துக்கு இன்னும் சில தினங்களில் தண்ணீர் திறக்கப்படுகிறது.
வெள்ளகோவில்:

பயிர் சாகுபடி குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென வெள்ளக்கோவில் கிளை பரம்பிக்குளம் -ஆழியாறு கால்வாய் பாசன விவசாயிகள் வேளாண்மைத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பி.ஏ.பி. வாய்க்காலில் முதல் மண்டலப் பாசனத்துக்கு இன்னும் சில தினங்களில் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட வருவாய் கிராமங்களில் நீர் திறப்பு குறித்த முறையான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்தப் பாசனத்தை பயன்படுத்தி விவசாயிகள் என்னென்ன பயிர் சாகுபடி செய்யலாம், நீர் திறப்பு விவரம் குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தால் விவசாயிகள் திட்டமிட ஏதுவாக இருக்கும்.

25 நாள்களுக்கு ஒரு சுற்று என நீர்  திறக்கப்படுமாயின், ஆயக்கட்டுதாரர்கள் எவ்விதப்பயிர் சாகுபடியும் மேற்கொள்ள வேண்டாம் என தெளிவான அறிவிப்பை திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்  வெளியிட வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News